Tuesday, January 12, 2016

மீண்டும் நான்....


காலத்தின் கோலத்தில சேர்ந்து  கரைந்த நான்
மீண்டும் நானாக
காலம் கற்று தந்த கலைகளுடன்.

Saturday, June 11, 2011

A day in village

திருவிழா கூட்டத்தில் தொலைந்த
குழந்தையாய் தவிக்கிறேன்
காப்பற்றுங்கள் இந்த
காதலிடமிருந்து.......................

WE

குருந்தகடுக்குள் அடங்கிவிட்டது வாழ்க்கை
எத்தனை முறை வேண்டுமானாலும்
மாற்றலாம், நமக்கான பாடலை
வேதனை!
விளக்கம் தெரியாமலே........................
கல் இட்ட குளத்தின்
ஒவ்வொரு அலையிலும் உன் நினைவுகள்
மாற்றிவிட்டாய் என் தனிமையை
என் விரோதியாய், முற்றிலும்.
சொட்டும் ரத்த துளிக்கும்
உன் பெயர் மட்டும் தெரிகிறது தெளிவாக
உலகுக்கு தெரியாத இந்த உணர்வுக்காக
தெரிந்தே தோற்கிறேன் உன்னிடம் உயிரோடு
துடிக்கிறேன் கஜினியாக மாற
15 நிமிடங்களில் உன்னை மறக்க
முடியவில்லை மாவீரனகிறேன்
300 வருடங்களும் உன் நினைவுகள்.
உதிரும் திரவமாக தெறிக்கிறது உயிர்
பிரபஞ்சம் உள்ளவரை உனக்காக மட்டும்........................

Sunday, January 30, 2011

கிறுக்கல் எழுத்துகள் புரிவதில்லை அவை
காதலர் கண்களுக்கு மட்டும்
எத்தனையோ சீண்டல்களுக்கு பின்னும்
அமைதியாக இறுக்கும் கடற்கரை மணலுக்கும்
கரங்களுக்குமான உறவு போல
புரிதலில் முளைக்கும் காதல்
நாட்காட்டியை போன்றது
கிழிக்கப்படும் தேதியும் அனுபவமாக
விதி(தை)க்க படுகிறது இங்கே.
ஊசி முனைக்குள் நுழைந்து வெளிவரும்
நூல் ஸ்பரிசமாக வேண்டும் காதல்
காலம் எல்லாம் இணைக்க......................

Sunday, November 14, 2010

மீண்டும் காதல்..........

செப்படி வித்தை தெரிந்தவள் போல நீ
தலையாட்டி பொம்மை போலவே வாழ்கிறேன் நான்
எத்தனை முறை அறுந்தாலும், கயறு தரும்
பட்டம் நான், என்னை நீ சுழற்ற
என் காலனி குழந்தைகளை என்ன செய்தாய் நீ
என்னை பார்க்கும் போதெல்லாம் உன்னை தேடுகிறார்கள்
மாபெரும் இரைச்சல், நீ பேசாத மௌன நேரங்களில்
சீக்கிரம் வந்துவிடு, வேலை செல்லும் அன்னையை தேடும்
குழந்தையாய் போனேன் நான்
உன் கையில் இறுக்கும் என் காதல் திண்பண்டதிற்காக......

Monday, April 12, 2010

பிரிவினை வாதத்திற்காக .......

யாரோ சொன்னார்கள்
இவர்கள் இல்லை அவர்கள் என்று
இவர்களும் சொன்னார்கள்
நாங்கள் இல்லை அவர்கள் என்று
யார்தான் சொல்வது
நாம் எல்லோரும் ஒன்று தான் என்று !