Sunday, January 30, 2011

கிறுக்கல் எழுத்துகள் புரிவதில்லை அவை
காதலர் கண்களுக்கு மட்டும்
எத்தனையோ சீண்டல்களுக்கு பின்னும்
அமைதியாக இறுக்கும் கடற்கரை மணலுக்கும்
கரங்களுக்குமான உறவு போல
புரிதலில் முளைக்கும் காதல்
நாட்காட்டியை போன்றது
கிழிக்கப்படும் தேதியும் அனுபவமாக
விதி(தை)க்க படுகிறது இங்கே.
ஊசி முனைக்குள் நுழைந்து வெளிவரும்
நூல் ஸ்பரிசமாக வேண்டும் காதல்
காலம் எல்லாம் இணைக்க......................

No comments:

Post a Comment