என்ன காதலடா இது
மனிதனை பாடப்படுத்துகிறதே
ஆயிரம் கோடி மரண கீற்றுகளின் பொட்டலம்
அவிழ்த்து பார்க்கும் அனைவருக்கும்
அறுக்கும் வலி தான் மிச்சம்
தெளியவிட்டு கலங்கடிக்கும் போதை
தெளிவில்லாமல் நகரும் வாழ்க்கை பாதை
எத்தனை இரவுகளில் நரகம்
மட்டுமே எனக்கு துணை
புரியாமல் புலம்பவிட்டு, பித்தன்
என்ற பெயரும் தருகிறது இலவசமாக
யாருக்கும் வேண்டாம் இந்த விதியின்
வன்மம், காதல் என்ற பெயரால்.......
Tuesday, March 30, 2010
Subscribe to:
Post Comments (Atom)

kathalin valiyai arumayaga solli irukai deshikan
ReplyDelete