என்னவளே
நான் இருக்கிறேன் உனக்காக
இங்கு வந்துவிடு
என் மார்பில் சரிந்து விழும் போதெலாம்
வெட்கைஎனும் பாதுகாப்பு தர
தந்தையாக நான் இங்கு
பிரசவகால பிணக்குகளில் எல்லவற்றையும்
துறந்து உனக்கு பணி செய்ய
தாயாக நான் இங்கு
கேலி பேச்சுக்கும் ஒரு போர்வை
தூக்கத்தை பகிர்ந்து கொள்ள
சகோதரியாக நான் இங்கு
அர்த்தமற்ற சண்டைகளின்
விளைவான ஊடல் காலத்தில்
சகோதரனாக நான் இங்கு
எத்தனை முறை நீ விழுந்தும்
தோள் கொண்டு தாங்கும்
தோழனாக நான் இங்கு
உலக பொது மொழியாம்
அன்பை காதலாக்கி காலமெல்லாம்
நான் இருக்கிறேன் உனக்காக
இங்கு வந்துவிடு
என்னவளே !!!
Tuesday, February 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)

nalla iruku deshikan . valthugal
ReplyDeleteThanks Lk. Seikrama magazine aarambinga, appuram naan thaan aasthana kavingar anga. hahahahaha
ReplyDeleteஅழகான கவி வரிகள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
Nandri NEke
ReplyDelete