Tuesday, February 23, 2010

எனது இன்றைய கவிதை

என்னவளே
நான் இருக்கிறேன் உனக்காக
இங்கு வந்துவிடு

என் மார்பில் சரிந்து விழும் போதெலாம்
வெட்கைஎனும் பாதுகாப்பு தர
தந்தையாக நான் இங்கு

பிரசவகால பிணக்குகளில் எல்லவற்றையும்
துறந்து உனக்கு பணி செய்ய
தாயாக நான் இங்கு

கேலி பேச்சுக்கும் ஒரு போர்வை
தூக்கத்தை பகிர்ந்து கொள்ள
சகோதரியாக நான் இங்கு

அர்த்தமற்ற சண்டைகளின்
விளைவான ஊடல் காலத்தில்
சகோதரனாக நான் இங்கு

எத்தனை முறை நீ விழுந்தும்
தோள் கொண்டு தாங்கும்
தோழனாக நான் இங்கு

உலக பொது மொழியாம்
அன்பை காதலாக்கி காலமெல்லாம்
நான் இருக்கிறேன் உனக்காக
இங்கு வந்துவிடு
என்னவளே !!!

4 comments: